Friday 3rd of May 2024 09:22:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் மூன்றவது நாளாக 3 ஆயிரத்தை கடந்த புதிய தொற்று: சென்னையில் 51 ஆயிரத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் மூன்றவது நாளாக 3 ஆயிரத்தை கடந்த புதிய தொற்று: சென்னையில் 51 ஆயிரத்தை கடந்தது!


தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 51 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்றுமுன்னதாக வெளியிட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று புதிதாக 3 ஆயிரத்துமு 713 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தினம் 68 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 25 ஆக உயர்வடைந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 939 புதிய தொற்றாளர்கள் இன்று இனம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 51 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை 44 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 33 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE